fbpx

நீட் தேர்வை அவங்க தான் கொண்டு வந்தாங்க….! எடப்பாடி பழனிச்சாமி விளாசல்……!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆட்சிக்காலத்தில் தான் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. கொள்கையின் அடிப்படையில் மட்டுமே கூட்டனை வைத்திருக்கிறோம் கொள்கையின் அடிப்படையில் தான் கூட்டணியே தவிர, அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. திமுக தான் தற்போது அடிமை கட்சியாக செயல்பட்டு வருகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

பின்னர் வாக்களிக்க பணம் வாங்க கூடாது என்ற நடிகர் விஜயின் பேச்சு தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ஜனநாயக நாட்டில் அரசியல் பேச எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Post

நீட் தேவையில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்……! எடப்பாடி பழனிச்சாமி…..!

Sun Jun 18 , 2023
நீட் எனப்படும் மருத்துவர் நுழைவு தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் ஆத்தூரில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு எதிர்ப்பில் அதிமுக தான் முதன்மையான கட்சியாக இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து விளக்கு பெற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாகவும் இருக்கிறது நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் […]

You May Like