2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது..
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/03/corona-1024x576.jpg)
கொரோனா காரணமாக நீண்ட கால பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.. இந்நிலையில் பிரிட்டனில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வில் கொரோனாவுக்கு பிறகு பலர் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆம்.. ஞாபக மறதி அல்லது மன அழுத்தம் போன்ற பல மனநலப் பிரச்சினைகளுக்கு கொரோனாவும் அதற்கு காரணமாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன..
பிரிட்டனில் 10-ல் 6 பேர், குறிப்பாக இளைஞர்கள், கொரோனாவுக்கு பிறகு மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. கவனம் செலுத்த முடியாமல் இருப்பது, குழப்பம் மற்றும் மெதுவாக சிந்திப்பது அல்லது எதிர்மறை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் அவர்களை தொந்தரவு செய்கின்றன. இதற்கு கொரோனா தொற்று ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோவிட் காரணமாக, மக்கள் அதிக அளவு மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டதாக கூறுகிறது. இதன் காரணமாக, சுமார் 36 மில்லியன் மக்கள் Brain fog என்ற நோயின் அறிகுறிகளான மறதி மற்றும் கவனம் செலுத்த முடியாத பிரச்சனையை உணர்ந்தனர். பிரிட்டனில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் நினைவாற்றல் மோசமாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
உயிரியல் நிபுணர் டாக்டர். ஃபெரர் இதுகுறித்து பேசிய போது “ கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்மில் பெரும்பாலோர் அதிக மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளோம். நமது குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவதைத் தவிர, வேலை அல்லது வேலையின் டென்ஷனால் நாங்கள் சிரமப்பட்டோம். இதனால் மனஅழுத்தமும், மன உளைச்சலும் ஏற்பட்டு தற்போது வரை மக்கள் அதன் பிடியில் உள்ளனர்..
மன அழுத்தம் காரணமாக ஹார்மோன் கார்டிசோல் அதிகரிக்கிறது, இதன் காரணமாக மோசமான மன ஆரோக்கியத்தின் பிரச்சனை அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த பிரச்சனையை கட்டுப்படுத்தாவிட்டால், மூளை தொடர்பான பல நோய்களுக்கு கூட வழிவகுக்கும்..” என்று தெரிவித்தார்..