fbpx

ரூ.1 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய ஐஸ்வர்யா வீட்டு வேலைக்கார பெண்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனது வீட்டில் இருந்த தங்க நகைகள், வைரம் மற்றும் நவரத்தினத்தின் கற்கள் ஆகியவை காணாமல்போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், கடந்த 2019இல் 3 முறை வீடு மாறிய போதும் லாக்கரில் இருந்த நகைகளை எடுக்கவில்லை எனவும், லாக்கரில் நகைகள் இருந்தது தன் வீட்டு வேலைக்காரர்களுக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஈஸ்வரி என்ற பணிப்பெண் வங்கி கணக்கில் பணப்புழக்கம் இருந்தது தெரியவந்தது.

கடந்த 4 வருடங்களாக ஐஸ்வர்யா வீட்டில் திருடிய தங்க நகைகளை ஈஸ்வரி சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார். இதையடுத்து, நகைகளை வாங்கிய கடைக்காரரிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளி கட்டிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஈஸ்வரி வங்கியிலிருந்து வாங்கிய 95 லட்சம் ரூபாய் கடனை 2 வருடங்களில் அடைத்துள்ளார். இதற்கு கார் டிரைவர் வெங்கடேஷன் ஈஸ்வரிக்கு துணையாக இருந்துள்ளார். இதையடுத்து, இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடிய நகைகள் மூலம் 1 கோடி ரூபாய்க்கு ஈஸ்வரி சொகுசு வீடு வாங்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

இன்று முதல் 26ஆம் தேதி வரை..!! தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் மழை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Wed Mar 22 , 2023
தமிழ்நாட்டில் இன்று முதல் மார்ச் 26ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் மார்ச் 26ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான […]

You May Like