சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் இந்தர் இக்பால் சிங் அத்வால், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ள இந்தர் இக்பால் அத்வால், 2004 முதல் 2009 வரை 14வது மக்களவையின் துணை சபாநாயகராகவும், பஞ்சாப் சட்டசபையின் சபாநாயகராகவும் பணியாற்றிய சரஞ்சித் சிங் அத்வாலின் மகன் ஆவார்.
அத்வாலுடன், அவரது இளைய சகோதரர் ஜஸ்ஜீத் சிங் அத்வால் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த பிற தலைவர்களும் டெல்லி தலைமையக அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தனர். பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளை உண்மையான அர்த்தத்தில் யாராவது செயல்படுத்துகிறார்களா என்றால் அது பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள மத்திய அரசுதான். மத்தியில் ஆளும் அரசு பல்வேறு திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைகிறேன் என்று அத்வால் செய்தியாளர்களிடம் கூறினார்.