fbpx

Akshay Kumar | 55 வயதில் இந்திய குடியுரிமை..!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அக்‌ஷய் குமார்..!!

கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்‌ஷய் குமார். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றிருந்தார். அண்மையில் ‘ஒஎம்ஜி 2’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், 55 வயதாகும் அக்‌ஷய் குமார் கடந்த 2000இல் கனடா நாட்டின் குடியுரிமையை பெற்றார்.

அதன் பின், பல படங்களில் இந்திய நாட்டின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமான அவர் நடித்து வந்த போதிலும், அவர் மீது ஒரு தரப்பினர் இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், சுதந்திர தினமான இன்று இந்தியக் குடியுரிமையைப் தான் பெற்றுள்ளதாக அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், தன்னை இந்திய குடிமகனாக அறிவிக்கும் ஆவணங்களின் படத்தை பதிவிட்டுள்ளதோடு, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! ஜெய் ஹிந்த்! எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் வேண்டி அக்‌ஷய் குமார் விண்ணப்பித்திருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், கொரோனா காரணமாக அதை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக அவர் அறிவித்துள்ள தகவல் ரசிகர்கள் இடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

’தன்னை அசிங்கப்படுத்தவே இப்படி செய்தீர்களா’..? ஊழியரை அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏ..!! கும்பகோணத்தில் பரபரப்பு..!!

Tue Aug 15 , 2023
இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேசியக்கொடி திடீரென அறுந்து விழுந்ததால், கோபமடைந்த திமுக எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன், அங்கிருந்த ஊழியரை அடிக்கப் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுதந்திர தினத்தை ஒட்டி கும்பகோணம் டவுன்ஹாலில்கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் கலந்துகொண்டார். கொடியை ஏற்றுவதற்காக கயிற்றை அவர் பிடித்து மேலே இழுத்த […]

You May Like