fbpx

மக்களே அலர்ட்.. இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை..

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 17-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 18, 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்று, லட்சத்தீவு பகுதி, கேரளா, குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

நாளை கர்நாடகா கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும், வீசக்கூடும்.. மத்திய கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்..

வரும் 16-ம் தேதி, கர்நாடகா கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மத்திய கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 65 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

வரும் 17-ம் தேதி, மத்தியகிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌
பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌இடையிடையே 60 கி.மீ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. எனவே மீனவர்கள் இந்த நாட்களில்‌ கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

நீலகிரியில் தொடர் கனமழை..! நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகள் குழு அனுப்பி வைப்பு..!

Fri Jul 15 , 2022
நீலகிரியில் தொடர் கனமழையால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், இதர உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்கவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், […]
ஆன்லைன் ரம்மி தடை சட்டம்..!! அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு..!! முதல்வர் முக.ஸ்டாலின் அதிரடி

You May Like