நாடு முழுவதும் இன்றும், நாளையும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய-மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலை எதிர்கொள்வதற்காக 2 நாள் மருத்துவ ஒத்திகையை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று (ஏப்ரல் 10) மற்றும் நாளை (ஏப்ரல் 11) ஆகிய தேதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒத்திகை நடைபெற உள்ளது.
இந்த ஒத்திகையின் போது அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்கள், ஆக்ஸிஜன் கையிருப்பு அளவு, மருந்துகள் கையிருப்பு ஆகியவை சோதித்து அறியப்படும். இதற்கிடையே, கொரோனா பரவல் திடீரென அதிகரித்துவிட்டால், அதனை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.