fbpx

பிரபல நடிகருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை…! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

நடிகரும் அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு லக்னோவில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான இவர் மீது 1996-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது சமாஜ்வாடி கட்சியின் தலைவராக இருந்த ராஜ் பாபர், அரசு அதிகாரியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறைத்தண்டனையுடன், நடிகருக்கு 8500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பணிகளில் தலையிட்டதற்காக இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது ராஜ் பாபர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மே 2, 1996 அன்று, நடிகர் மற்றும் அவரது உதவியாளர்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து அதிகாரிகளைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டிய தேர்தல் அதிகாரி ஸ்ரீகிருஷ்ண சிங் ராணாவால் ராஜ் பப்பர் மற்றும் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டது. பணியில் இருந்த அதிகாரியை பாபர் தாக்கியது மட்டுமின்றி, அரசு பணியிலும் தலையிட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டது. நடிகர் மற்றும் மற்றவர்கள் மீது IPC 143, 332, 353, 504, 323 மற்றும் 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் தான் தற்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Also Read: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. இனி RTO அலுவலகம் செல்லாமல் நீங்களும் Licence வாங்க முடியும்…! எப்படி தெரியுமா…?

Vignesh

Next Post

இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடல் எடையும் குறையும்..

Fri Jul 8 , 2022
மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையால் உடல் ஆரோக்கியத்திற்கு பல தீங்குகள் ஏற்படுகின்றன.. எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வது அவசியமாகிறது.. அந்த வகையில் இன்று அன்னாசிப்பழத்தை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.. அன்னாசி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.. மருத்துவ குணங்கள் நிறைந்த அன்னாசி பழத்தில் கால்சியம், வைட்டமின், என் சி போன்ற ஊட்டச்சத்துக்களின் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற-ஆக்ஸிடன்ட்கள் […]

You May Like