fbpx

நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்கும்.! வெளியான முக்கிய அறிவிப்பு..!

நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பைத் தொடர்ந்து பள்ளியில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. ஆனால், அரசிடம் அனுமதி பெறாமல் பள்ளிகளை மூடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்கும்.! வெளியான முக்கிய அறிவிப்பு..!

இந்நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரை, தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பினர் சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட மாணவி மரணத்துக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேசமயம் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் ஆணையரிடம் முறையிட்டதாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு இருப்பது போல், தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தனர்.

நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்கும்.! வெளியான முக்கிய அறிவிப்பு..!

இன்றைய ஸ்ட்ரைக்கில் 60 சதவீத பள்ளிகள் பங்கேற்றதாகவும், கல்வி மற்றும் காவல், வருவாய் அதிகாரிகளின் மிரட்டல் காரணமாக 40 சதவீத பள்ளிகள் மட்டும் வழக்கம் போல் செயல்படதாகவும் கூறிய கூட்டமைப்பு நிர்வாகிகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்துப் பேசிய பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாகக் கூறினர். மேலும், தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பினர் நடத்திய சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Chella

Next Post

திருவிழாவிற்கு வந்த இடத்தில் மனைவி செய்த வேலையால்.. அதிர்ச்சி அடைந்த கணவன்...!

Mon Jul 18 , 2022
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகில் உள்ள விண்ணுவாம்பட்டு பகுதியில் குடியிருப்பவர் ஜெயக்குமார். இவர் பெங்களுருவில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஜெயக்குமாருக்கு கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் பூவரசி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுங்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜெயக்குமார் குடும்பத்துடன் பெங்களுரில் வசித்து வந்தார். இந்த நிலையில், கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக ஜெயக்குமார், மனைவி மற்றும் மகளுடன் விண்ணுவாம்பட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமை […]
7 ஆண்டுகளில் 14 முறை கட்டாய கருக்கலைப்பு..! உறவில் இருந்தவர் உதறித்தள்ளியதால் விபரீத முடிவு..!

You May Like