கருவாடு பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாகும். மீனை சாப்பிடும் அளவிற்கு கூட நாம் கருவாடை அதிகமாக சாப்பிட மாட்டோம். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவுகள் எதுவென்றால் அது கருவாடு மற்றும் மீன்தான். கருவாட்டில் 80-85 சதவிகிதம் வரை புரதச்சத்து உள்ளன. கருவாடு மீன்கள் தனித்துவமான சுவையைக் கொண்டுள்ளன மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளும் உண்டு. இருப்பினும், உலர்ந்த மீன் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சிலர் அதை சாப்பிடக்கூடாது. ஏனெனில் சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால், எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கருவாடு சாப்பிடுவதன் நன்மைகள்:
* உலர்ந்த மீனில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்கலை வலுப்படுத்த உதவுகின்றன.
* நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகமாக உள்ளன. எனவே சளி, இருமல் உள்ளவர்களுக்கு கருவாட்டுக் குழம்பு ரொம்பவே நல்லது.
* நீர்ப்பை, சினைப்பை, கருப்பை போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் அவற்றை சரி செய்ய இது உதவும்.
* கருவாடு வாதம், பித்தம், ரத்த ஓட்டம் போன்ற பிரச்சினைகளை குணமாகும்.
* பாலூட்டும் பெண்கள் பால் சுறா கருவாடு சாப்பிட்டால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
* இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது : இதய நோய், செரிமான பிரச்சனை, சரும பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை போன்ற பிரச்சினை உள்ளவர்கள் கருவாடு சாப்பிடவே கூடாது. முக்கியமாக, இரத்தம் அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அதிகம் உள்ளவர்கள் கருவாட்டை தொட்டுக் கூட பார்க்கவே கூடாது. தடிப்புகள், கொப்புளங்கள் மற்றும் அரிப்பு போன்ற அலர்ஜி பிரச்சனைகள் உள்ளவர்கள் உலர்ந்த மீன்களை சாப்பிடுவது பிரச்சனையை மோசமாக்கும்.