பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.. எனினும் இந்த கூட்டணியில் கடந்த சில நாட்களாக விரிசல் ஏற்பட்டு வந்தது.. பாஜக மீது ஐக்கிய ஜனதா தள கட்சியினர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.. இந்த சூழலில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில் பாஜக உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி முறித்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியான வண்னம் உள்ளது.. அதற்கேற்றார் போல் பீகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதால் பீகாரில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது..
இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.. பீகார் மாநில பகு சௌஹானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.. இதன் மூலம் பாஜக கூட்டணியை முறித்து கொண்டுள்ளார் நிதிஷ்குமார்.. மேலும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.. பீகாரில் மொத்தம் உள்ள 243 எம்.எல்.ஏக்களில் சுமார் 160 பேரின் ஆதரவு ஐஜத, ஆர்ஜேடி கூட்டணிக்கு உள்ளது.. ஐஜத 45, ஆர்ஜேடி 79, காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 12 எம்.எல்.ஏக்கள் சேர்ந்து புதிய கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனர். இதையடுத்து நிதிஷ்குமார் 160 பேரின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்..
பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம், 2024 மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. மேலும் தற்போதைய பீகார் அரசியல் களம், 2024 தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது..