ஐதராபாத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஸ்டூடியோ திறந்துள்ளார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிரஞ்சீவி ஸ்டூடியோவை திறந்து வைத்தார்.
நடிகர் அல்லு அர்ஜுன்மற்றும் குடும்பத்தினர் ஐதராபாத் அருகே தெலுங்கு திரைப்பட ஸ்டூடியோ நிறுவனத்தை திறந்து வைத்துள்ளனர். தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் என்ற பெயரில் படங்களைத் தயாரித்து வருகின்றது. மேலும் ஆஹா என்ற ஓ.டி.டி. தளத்தை அவர் தயாரித்து வருகின்றார்.
தற்போது ஐதராபாத் அருகிலுள்ள காந்திபேட் பகுதியில், அல்லு ஸ்டூடியோஸ் என்ற படப்பிடிப்பு தளத்தை திறந்து வைத்துள்ளார். , அல்லு அர்ஜுனின் தாத்தாவும் தெலுங்கு குணசித்திர நடிகருமான அல்லு ராமலிங்கையா அவர்களின் பிறந்த நாளான நேற்று இந்த ஸ்டூடியோ திறந்து வைக்கப்பட்டது. அல்லு அர்ஜுனின் மாமா நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டு இந்த ஸ்டூடியோவை திறந்து வைத்தார். நடிகர்கள், நாகபாபு, அல்லு சிரிஷ் உட்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.