தென் கொரியாவில் வசிக்கும் 50 வயது முதியவர் நான்கு மாதங்களாக தாய்லாந்தில் இருந்துள்ளார். அவர் தென் கொரியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு டிசம்பர் 10 அன்று தாய்லாந்தில் இறந்தார். அவர் அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் அவர் Naegleria foliari amoeba நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறியது. ஒற்றை செல் உயிரினமான நைஜெலேரியா ஃபோலியரி ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளில் காணப்படுகிறது.
சில அமீபாக்கள் ஆபத்தானவை அல்ல. அதே சமயம் நைஜெலேரியா ஃபோலியேரி மனிதர்களின் மூக்கின் வழியாக சென்று மூளை திசுக்கள் மற்றும் நரம்புகளை பாதித்து பக்கவாதத்தை ஏற்படுத்தும். இந்த வைரஸ் வாந்தி, குமட்டல், தலைவலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இது மனநிலை மாற்றங்கள், வலிப்புத்தாக்கங்கள் மற்றும் வலிப்பு கூட ஏற்படலாம்.
அமெரிக்காவில், 1962 முதல் 2021 வரை 154 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் எம்.பாலமுருகன் கூறுகையில், “இந்தியாவில் இந்த அமீபா பற்றி கவலைப்பட தேவையில்லை.
நீச்சல் கற்கும் போது அசுத்தமான தண்ணீரை தவிர்க்க வேண்டும். கவனமாக இருப்பது நல்லது. இதுபோன்ற அமீபா இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.