fbpx

இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொன்ற கணவன்.!

துருக்கியின் முக்லா பகுதியில் பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்கு என்ற இடத்திற்கு ஹகன் அய்சல் (41) என்பவர் தனது மனைவி செம்ரா அய்சலுடன் (32) சென்றிருக்கிறார். செம்ரா அய்சல் 7 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

இந்த சூழலில், சுற்றுலாவுக்கு இருவரும் சென்றிருந்த நிலையில் ஹகன், செம்ராவை 1,000 அடி உயரத்திற்கு கூட்டி சென்று செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கூறி, ஆசையாக அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதனை தொடர்ந்து திட்டம் போட்டு யாவரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு , நிறைமாத கர்ப்பிணியான மனைவி செம்ராவை 1,000 அடி உயர மலையில் இருந்து கீழே தள்ளி ஹகன் கொன்றிருக்கிறார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஹகன் அய்சலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் . செம்ரா சாதாரணமாகவே உயரத்தை கண்டால் பயம் என்பது தெரிந்த கொண்ட கணவர் அய்சல் மனைவியை மலையில் இருந்து தள்ளி கொன்றிருக்கிறார் என்பது ஊர்ஜிதமானது.

விசாரணையில் ஏன் இந்த கொலை செய்தீர்கள் என்பதற்கு ஹகன் அளித்த பதிலை கேட்டு நீதிபதிகளே அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஏனெனில் மனைவி செம்ரா பெயரில் இன்ஷுரன்ஸ் பணம் 25 ஆயிரம் டாலர் அதாவது 20 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் இருந்தது.

அதனை பெறுவதற்காகவே ஹகன் இந்த கொடூர செயலை செய்திருக்கிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் ஹகன் அய்சல் விடுதலையாக வேண்டுமானால் குறைந்தபட்சமாக 30 ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Rupa

Next Post

பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி மற்றும் குடும்ப புகைப்படம் வைரல்.!

Fri Nov 4 , 2022
தென்னிந்திய சினிமாவில் பலராலும் பேசப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழில் பிடித்து, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைப்படத்துறையில் முத்திரை பதித்துள்ளார். இதனை தொடர்ந்து, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார். மேலும், இவர் தற்போது விமரிசையாக பேசப்படும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த 1994-ம் ஆண்டில் […]

You May Like