திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வித் திறனையும் தமிழ் மைதான பற்றியும் அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலான திருக்குறள் உள்ளது. இந்த சிறப்பு மிக்க 1330 திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனனம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
எனவே, 1330 திருக்குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வவங்களுக்கு தலா ரூ.10,000/-ம் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் . தற்போது இந்த பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையம், திண்டுக்கல் வளர் தமிழ் மன்றம் ஆகியவை இணைந்து 99-வது கருத்தரங்கத்தை நடத்தியது. கூட்டத்தில் பேசிய தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை 1,5000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.