நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகின்றது.
கடந்த வாரம் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதை கவனித்த நெட்டிசன்கள் எப்படி பிறந்தது என்ற கேள்வி எழுப்ப ஆரம்பித்த நிலையில், அவர்கள் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுள்ளது தெரியவந்தது.
இது குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி தமிழக அரசு அவர்கள் வாடகை தாய்க்கான விதிமுறைகளை மீறி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
இத்தகைய சூழலில், நயன்தாரா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சார்லஸ் அலெக்சாண்டர் என்ற வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் படி, “நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் மற்றும் வாடகை தாய் உள்ளிட்டோரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.