குஜராத் மாநிலத்தில் சமூக வலைதளம் மூலமாக நண்பனான 22 வயது இளைஞன் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் 20 ஆம் தேதி தனது தந்தையுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்ட சிறுமி இந்த இளைஞனுக்கு போன் செய்திருக்கிறார். அந்த இளைஞன் வந்து சிறுமியை அழைத்துச் சென்று வேறொரு பெண்ணின் அடையாள அட்டையுடன் அவரை ஹோட்டலில் அறை எடுத்து தங்கச் செய்துள்ளார். பின்னர் இருவரும் வெளியில் சென்று உணவு அருந்தி வந்த பின் இந்த இளைஞர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். தந்தையுடன் சண்டை போட்டு விட்டு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார் அவரது தந்தை.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த உண்மைச் சம்பவம் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் விசாரணையில் அந்த சிறுமி தனது குடும்பத்தோடு குறித்த உணவகத்திற்கு சாப்பிட வரும்போது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த இளைஞர் தெரிவித்திருக்கிறார். பின்னர் இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக இருவரும் பேசி வந்திருக்கின்றனர். 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் கற்பழித்த சம்பவத்தால் குஜராத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர் மட்டுமே வசித்து வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த சிறுமியின் தாயார் அவரது தந்தையிடம் இருந்து விவாகரத்து பெற்று வேறு ஒருவரை மணந்து மும்பையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.