சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மனோஜ் ராஜ்புத், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ராஜ்புத். இவர் நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த […]

பரமக்குடியில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் அரசியல் கட்சித் தலைவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரமக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மறத்தமிழர் சேனை கட்சியின் தலைவர் புது மலர் பிரபாகர் மற்றும் அதிமுக கவுன்சிலர் சிகாமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி உயர் […]

திரிபுரா மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியால் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது வீட்டில் இருக்கும்போது 26 வயது இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது கணவருடன் பிப்ரவரியில் 15 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164-ன் படி […]

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அந்த மாவட்டத்தைச் சார்ந்த சிறுவன் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கேரி என்ற ஊரில் இரண்டு சிறுமிகள் வீட்டின் மாடியில் விளையாண்டு கொண்டிருந்துள்ளனர் . அப்போது சிறுமிகள் வைத்து விளையாடிய பலூன் கீழே விழுந்திருக்கிறது. இதனை எடுப்பதற்காக சிறுமிகள் […]

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் நன்பரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது . அந்தப் பகுதியைச் சேர்ந்த 1 வயது குழந்தையை 50 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். […]

ராஜஸ்தான் மாநிலத்தில் ‘NEET’ தேர்விற்கு தயாராகி வந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை 4 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் தங்கி நீட் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அங்கு நீட் தேர்விற்கு […]

சேலம் மாவட்டத்தில் 50 வயது பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குறுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாயி(50). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பெருமாயி கடந்த 11-ம் தேதி இரவு தலையில் கல்லை போட்டு […]

கர்நாடக மாநிலத்தில் கணவர் கண் முன்னே மனைவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி அந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் தனது கணவருடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். […]

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் அடிமாலி பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி நேற்று முன் தினம் வீட்டில் இருந்து மாயமானார். அவரை காணாது திகைத்த பெற்றோர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த சிறுமியை […]

உத்திரபிரதேசத்தில் தனியார் பள்ளியில் படித்த 5 வயது மாணவியை, உணவு இடைவேளையின் போது அதே பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்கள் வன்புணர்வு செய்துள்ளனர். ஆபாச வீடியோக்களை பார்த்து இவ்வாறு செய்ததாக அந்த இரு சிறுவர்களும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தானேபூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி படித்து வந்தார். உணவு இடைவேளையின்போது அதே […]