fbpx

Ramadoss Vs Anbumani | தைலாபுரம் சென்ற அன்புமணி.. முகத்தை கூட பார்க்காமல் திரும்பி அமர்ந்திருந்த ராமதாஸ்..!! முடிவுக்கு வந்ததா மோதல்..?

பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றார். இதையடுத்து ஜி.கே.மணியின் மகனும், திரைப்படத் துறையில் லைகா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள தமிழ் குமரனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியை அக்டோபர் மாதம் ராமதாஸ் வழங்கினார். அடுத்த 3 மாதத்தில், அதாவது ஜனவரி 2023-ம் ஆண்டு தனது பதவியை தமிழ் குமரன் ராஜினாமா செய்தார். இந்நிலையில், ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தியின் மகனான முகுந்தனை மாநில ஊடகப் பிரிவு செயலாளராக நியமித்த ராமதாஸ், அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார்.

இந்த நிலையில் வானூர் அருகே பட்டானூரில் பாமக சார்பில் நேற்று நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் நிறுவனர் ராமதாஸ், “அன்புமணிக்கு உதவியாக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன்” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, “அவன் கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா ? அவனுக்கு என்ன அனுபவம் இருக்கும் ? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள்.

களத்தில் நல்ல திறமையான ஆட்கள் வேண்டும் என்று கூறுகிறேன்” என்று ஆவேசமானார் அன்புமணி. அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டுப் பேசிய மருத்துவர் ராமதாஸ், `யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது.” என்றார். அதையடுத்து சென்னை பனையூரில் புதிதாக அலுவலகம் திறந்திருப்பதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறும் கூறிவிட்டு வெளியேறினார் அன்புமணி. இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை, அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இதற்காக சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி புறப்பட்டுச் சென்றார். கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்திய சமாதான முயற்சியைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தைலாபுரத்தில் தான் பாமக தலைமை செயலகம் செயல்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுருத்தியுள்ளார். அன்புமணி தனியாக செயல்படுவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்த ராமதாஸ், கட்சியை நிறுவியது முதல் தற்போது வரை கட்சியை நிலை நிறுத்த அவர் பட்ட கஷ்டங்களை எடுத்துரைத்தார்.

தைலாபுரம் என்பது தான் எங்கள் அரசியல் முகவரி.. அதனை எப்போதும் விட்டுக்கொடுக்க கூடாது.. அதனை உணர்ந்து அன்புமணி செயல்பட வேண்டும் என மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் கேட்டுக்கொண்டார். அதே நேரம் முகுந்தன் மீது தனக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது எனவும் அன்புமணி தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் தனக்கு கட்சியில் உரிய அதிகாரம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது ராமதாஸ் அன்புமணியை நேருக்கு நேர் பார்க்காமல், பேசாமல் இறுக்கத்துடன் அமர்ந்திருந்தார்.

Read more ; பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி…! கட்சிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட கூடாது… பாமக முகுந்தன் அதிரடி முடிவு…!

English Summary

Anbumani Ramadoss met and talked to Ramadoss when there was a conflict in the PMK General Assembly.

Next Post

ஒரு பெண்ணுக்கு இரண்டு கள்ளக்காதலர்கள் போட்டி.. கடைசியில் நடந்த பகீர் சம்பவம்.. நடந்தது என்ன?

Sun Dec 29 , 2024
Two men for one woman- Laborer kills driver in extortion case

You May Like