fbpx

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த அனிதா, தமிழ்வழிக் கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.. ஆனால் மத்திய அரசு, 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணுக்கு பதிலாக, நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவித்ததால் மனமுடைந்தார்.

12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை தேர்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே, தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற முடியும் என்பதை உணர்ந்து, நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.. தீர்ப்பு வெளியான 9 நாட்களில் அனிதா தனது இன்னுயிரை 2017 செப்டம்பர் 1-ம் நாள் மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் நீட் தேர்வு முறையின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியது.

இதனிடையே திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றவுடன் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு, சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநரால் அம்மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் அந்த மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் வாயிலாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த புதிய மருத்துவக் கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு, இம்மாவட்ட மக்களின் நலனிற்காக இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. நீட் தேர்வினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு ‘அனிதா நினைவு அரங்கம்’ என பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

வதந்தி வீடியோ விவகாரம்.. பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

Tue Mar 14 , 2023
வதந்தி வீடியோ விவகாரத்தில், டெல்லியை சேர்ந்த பாஜக பிரமுகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது. டெல்லியை சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகராக உள்ள பிரசாந்த என்பவர், கடந்த 3-ம் தேதி, பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாக தாக்கப்படுவதாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. பீகார் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான இடம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் அவர் […]
’தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் நாப்கின் இயந்திரங்கள்’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

You May Like