fbpx

எங்கே போனது உங்க சட்டம்? தடையை மீறி பள்ளியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை மற்றும் பாஜக எம்.எல்.ஏ!!!

பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ஆர்.எஸ்.எஸ் தேசிய இணை பொதுச்செயலாளர் அருண்குமார் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் பள்ளிகளில் கூட்டம், பேரணி நடத்த அனுமதியில்லா நிலையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது. அதிலும் இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அனுமதியில்லா இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

அசத்தல்...! 6 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு...! தமிழக அரசு தொடங்கும் சூப்பர் திட்டம்...!

Mon Nov 28 , 2022
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் […]

You May Like