பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ஆர்.எஸ்.எஸ் தேசிய இணை பொதுச்செயலாளர் அருண்குமார் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் பள்ளிகளில் கூட்டம், பேரணி நடத்த அனுமதியில்லா நிலையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது. அதிலும் இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அனுமதியில்லா இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.