fbpx

நான் ஜெயிப்பதற்காக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளதா திமுக..? -சீமான் விமர்சனமும்.. அண்ணாமலையின் பதிலும்..

கோவையில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக சீமான் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுராங்கத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பாஜகவை எதிர்க்கிறோம், மோடியை வரவிடக் கூடாது எனக் கூறிக்கொண்டு, கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை எனக் கூறினார்.

மேலும், தூத்துக்குடியில் கனிமொழிக்காக தமாகவுக்கு சீட் கொடுத்து பாஜக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் அண்ணாமலைக்காக திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது என விமர்சித்தார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

அண்ணாமலை கூறியதாவது, “முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கோயம்புத்துரிலேயே உட்கார்ந்துருக்காரு. நாளை முதல் உதயநிதி ஸ்டாலின் வந்து ரெண்டு நாள் இங்கே உட்காரப் போறாரு. தமிழ்நாட்டின் உளவுத் துறை அமைப்புகள் அனைத்தும் இங்குதான் இருக்கின்றன. கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை திமுக கொடுத்து வருகிறது. சில ஊரில் 500 ரூபாயும், சில ஊரில் 1000 ரூபாயும் கொடுத்துருக்காங்க. பணபலத்தை வைத்து ஜெயிப்போம்னு திமுக நினைக்கிறாங்க. என்னை ஜெயிக்க வைப்பதற்காகவா இத்தனை வேலைகளையும் திமுக செஞ்சிட்டு இருக்கு?” என அண்ணாமலை கேள்வியெழுப்பினார்.

Next Post

18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை - தேர்தல் நேரத்தில் அதிகரிக்கும் பதற்றம்!!

Tue Apr 16 , 2024
சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரு தொகுதிக்கும், ஏப்ரல் 26ம் தேதி 3 தொகுதிகளுக்கும், மே 7ஆம் தேதி 7 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு […]

You May Like