fbpx

வாரத்தில் 4 நாட்கள் வேலை.. சம்பள முறையில் மாற்றம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

மத்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 ஊதியக் குறியீடுகளை தயாரித்துள்ளது… அதாவது ஊதிய குறியீடு, தொழில்துறை உறவுகள் குறியீடு, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சமூக பாதுகாப்பு குறியீடு ஆகியவை ஆகும்.. கடந்த 2019-ம் ஆண்டில் தொழில்துறை உறவுகள், வேலையின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்று தொழிலாளர் குறியீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த புதிய ஊதிய குறியீட்டின் படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் நிறுவனத்தின் செலவில் (CTC) 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது. தற்போது, ​​பல நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து, அதிக அலவன்ஸ்களை வழங்குவதால், நிறுவனத்தின் சுமை குறைகிறது. ஊதியக் குறியீடு சட்டம், அமல்படுத்தப்பட்டவுடன், ஊழியர்களின் சம்பள அமைப்பு முற்றிலும் மாறும். ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் பிஎஃப் அதிகரிக்கும் என்பதால் ‘டேக் ஹோம் சம்பளம்’ குறையும். பிஎஃப் உடன், கிராஜுவிட்டிக்கான பங்களிப்பும் அதிகரிக்கும். இதனால் ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறையக்கூடும்..

புதிய தொழிலாளர் குறியீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, நிறுவனங்கள் ஒரு வாரத்தில் மூன்று வாரம் விடுமுறை அளிக்கும் விருப்பம் உள்ளது. ஊழியர்களை வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய எந்த நிறுவனமும் அனுமதிக்கப்படாது. அதாவது ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்பவர்கள் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும். 8 மணி நேர வேலை உள்ளவர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்வார்கள்.

மேலும் புதிய ஊதியக் குறியீட்டின்படி ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு (Earned Leave) எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு துறைகள் இப்போது 1 வருடத்தில் 30 விடுமுறைகளை அனுமதிக்கின்றன, பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் 60 விடுமுறைகள். ஊழியர்கள் 300 விடுமுறைகள் வரை பணமாகப் பெறலாம், இருப்பினும் புதிய குறியீட்டில் விடுமுறை நாட்களை 450 ஆக அதிகரிக்க தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. எனினும் ஊழியர்கள் 20 வருட சேவைக்குப் பிறகுதான் இந்த விடுமுறைகளை பணமாக எடுத்துக்கொள்ள முடியும்.

இந்த புதிய விதிகள் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அவை அமலுக்கு வரவில்லை.. இந்நிலையில் புதிய ஊதிய குறியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசிய போது “ கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகள் குறித்த வரைவு விதிகளை தயாரித்துவிட்டது.. புதிய விதிகள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படும்.. சில மாநிலங்கள் இன்னும் வரைவு விதிகளை உறுதிப்படுத்தும் பணியில் உள்ளது.. மேற்கு வங்கம் அவற்றை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.. மேகாலயா உட்பட சில வடகிழக்கு மாநிலங்கள் நான்கு குறியீடுகளின் வரைவு விதிகளை உருவாக்கும் செயல்முறையை முடிக்கவில்லை..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

குடியரசு தலைவர் தேர்தல்.. நாடு முழுவதும் இன்று வாக்குப்பதிவு..

Mon Jul 18 , 2022
நாட்டின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குபதிவு இன்று நடைபெற உள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய […]

You May Like