fbpx

இந்த மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வு.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய முடிவு..

கோடை வெயிலின் காரணமாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது..

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடுமையான வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.. இந்த சூழலில் ஏப்ரல், மாதங்கள் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வெயிலின் காரணமாக தற்போது 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது..

தமிழகம் முழுவதும் 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 24 ஆம் தேதி தொடங்கி மாத இறுதிவரை ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருந்தது. இந்நிலையில், இந்த தேர்வுகளை வரும் 11ஆம் தேதி தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. மெலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தேதியில் தேர்வுகளைத் தொடங்கி, ஒரே வாரத்திற்குள் நிறைவடையும் வகையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.. அதன்படி சென்னையில் வரும் 18ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன..

Maha

Next Post

"செல்ஃபி எடுக்கலாம் வா" எனக் கூறி மலை உச்சிக்கு அழைத்துச் சென்று தள்ளி விட்டு கொலைமுயற்சி! காவல்துறை விசாரணை!

Tue Apr 4 , 2023
“செல்பி எடுக்கலாம் வா” என்று மனைவியை மலை உச்சிக்கு அழைத்து சென்று கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தைச் சார்ந்தவர் ராஜ் ரஞ்சன் மிஸ்ரா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நிஷா குமாரி என்று பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரது மனைவி நிஷா குமாரி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் […]

You May Like