டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை புதிய சைபர் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையில் நிர்வாகம் சார்பில், சைபர் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த, சைபர் தாக்குதல் செயல்பாட்டிலிருந்து தங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.
ஏற்கனவே நவம்பர் 2022 இல் ஒரு சைபர் தாக்குதலால் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் சீர்குலைந்தது. ஒரு வருடத்திற்குப் பிறகு தற்போது டெல்லியில் நடந்த இரண்டாவது சைபர் தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதல் காரணமாக மருத்துவ நிறுவனத்தின் சேவையகங்களை ஆஃப்லைனில் மேற்கொள்ளப்பட்டது, மேலும் இணைய பாதுகாப்பை மீறியதாகக் கூறப்படும் இரண்டு ஆய்வாளர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.