fbpx

காதலுக்கு எதிர்ப்பு..!! மனமுடைந்த மாணவன் தற்கொலை..!! துக்கத்தில் காதலியும் தூக்கிட்டு தற்கொலை..!!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். 17 வயதான இவர் தற்போது பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில், அதே பள்ளியில் பயிலும் பாவானி (17) என்ற மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு மாணவனின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த வீரபத்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த காதலி பவானியும் தன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் அறிந்த பாலமேடு போலீசார் விரைந்து வந்து இறந்த மாணவன், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

நாமக்கல் அருகே குடிசைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…..! காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு……!

Tue May 16 , 2023
பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் சரளைமேடு என்ற கிராமத்தைச் சார்ந்தவர் முத்துசாமி. இவர் அந்த பகுதியில் வெள்ளம் உற்பத்தி செய்யும் ஆளை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருடைய ஆலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி இரவு ஆளை அருகே உள்ள குடிசையில் வட மாநில தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் சிலர் அந்த குடிசைக்கு தீ வைத்து […]

You May Like