fbpx

ரூ.1 லட்சம் + விருது…! பிரதம மந்திரி தேசிய குழந்தைகள்‌ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள்‌ விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; மத்திய அரசின்‌ மகளிர்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ மேம்பாட்டு அமைச்சகத்தின்‌ மூலம்‌ “பிரதம மந்திரி தேசிய குழந்தைகள்‌ விருது-2023” அறிவிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த குழந்தைகள்‌, தனிப்பட்ட நபர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும்‌ பண்பாடு, சமூகசேவை போன்ற துறைகளில்‌ வீரதீர செயல்புரிந்த தனி தகுதி வாய்ந்த குழந்தைகளை அங்கீகரிக்கும்‌ விதமாக “பால சக்தி புரஷ்கார்‌” என்னும்‌ குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 1 லட்சம்‌ ரூபாய்க்கான காசோலை, பதக்கம்‌, சான்றிதழ்‌ மற்றும்‌ தகுதியுரை புத்தகம்‌ ஆகியவற்றைக்‌ கொண்டதாகும்‌.

குழந்தைகள்‌ மேம்பாடு, குழந்தைகள்‌ பாதுகாப்பு மற்றும்‌ குழந்தைகள்‌ நலம்‌போன்ற துறைகளில்‌, குழந்தைகளுக்கான சேவைகளில்‌ தலைசிறந்த பங்களிப்புசெய்த தனிப்பட்ட நபர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களை அங்கீகரிக்கும்‌ விதமாக “பால கல்யாண்‌ புரஷ்கார்‌” என்னும்‌ தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்டநபர்களுக்கான விருதிற்கு 1 லட்சம்‌ ரூபாய்க்கான காசோலை, பதக்கம்‌, சான்றிதழ்‌ மற்றும்‌ தகுதியுரை வழங்கப்படும்‌. நிறுவனங்களுக்கான விருதிற்கு 5 லட்சம்‌ ரூபாய்க்கான காசோலை, பதக்கம்‌, சான்றிதழ்‌ மற்றும்‌ தகுதியுரை வழங்கப்படும்‌.

இவ்விருதிற்கான விண்ணப்பங்களை https://awards.gov.in/login என்னும்‌ இணையதள பக்கத்தில்‌ விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌. குழந்தைகள்‌, தனிப்பட்ட நபர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களிடமிருந்து இவ்விருதிற்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும்‌. பிற முறைகளில்‌ அனுப்பப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள்‌ 31.08.2023 ஆகும்‌.

Vignesh

Next Post

இன்றுமுதல் வரும் 21ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு!… வானிலை மையம்!

Wed Aug 16 , 2023
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றுமுதல் வரும், 21ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில், மிதமான மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் (ஆகஸ்ட் 16) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 21-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி […]

You May Like