fbpx

வடிவேலு, சூரி இருவரும் இப்படிப்பட்டவர்களா?… ஆத்திரத்தை கொட்டித்தீர்த்த போண்டா மணி!… வைரலாகும் பேட்டி!

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமான நிலையில், சில மாதங்களுக்கு முன் சிகிச்சையில் இருந்தபோது, யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கேதீஸ்வரன் என்ற போண்டா மணி, பாக்யராஜ் இயக்கத்தில் 1991ல் வெளியான பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முத்து, முறை மாப்பிள்ளை, திருமலை, வின்னர், சுந்தரா டிராவக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்த வா வரலாம் வா என்ற படம் கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியானது. சினிமா தவிர இவர் எங்க வீட்டு மீனாட்சி என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இந்தநிலையில், சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று இரவு திடீரென குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், அவர், சில மாதங்களுக்கு முன் சிறுநீரக செயலிழப்பால் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த சமயத்தில் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகிவருகிறது.நடிகர் சூரி மீது தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். எனக்கு கிட்னி கொடுத்து உதவ, சொந்த பந்தம் யாரும் இங்கு இல்லை. நான் இலங்கைக்காரன். ஒன்னு அங்கே போய் பண்ணனும், இங்கே வந்து கொடுக்க முடியாது. அரசு விதிகள் நிறைய இருக்கு. இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியே போய் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை பண்ண முடியும். அரசிடம் பதிந்திருப்பதால், கிடைக்க 5 வருடம் கூட ஆகலாம் என்கிறார்கள்.

மயில்சாமி மறைந்துவிட்டார், இவர் இருந்திருந்தால் நான் யாரிடமும் அழைய வேண்டிய அவசியம் இருக்காது. அவரே நடிகர்களிடம் பணம் வசூலித்து அறுவை சிகிச்சைக்கு கொடுத்திருப்பார். அவர் இறக்கும் ஒரு வாரத்திற்கு முன் தான் என்னை சந்தித்து பேசினார். ‘என்னை கவனிக்க யாரும் இல்லை’ என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அதை பார்த்து விட்டு, ‘நீ ஒன்னும் கவலைப்படாத, எல்லாம் நல்ல படியா நடக்கும். யாரையும் பத்தி தவறாக பேசிடாத, எல்லாரும் பிஸியா இருப்பாங்க. சரியான நேரத்தில் உதவி பண்ணுவாங்க. நாம என்ன கொடுத்தா வெச்சிருக்கோம்,’ என்று என்னிடம் கூறினார்.

இல்லண்ணே, என்ன செய்யுறதுனு தெரியல… அதான் அப்படி பண்ணிட்டேன்’ என்று கூறினேன். ‘அதான் நான் இருக்கேன்ல… நீ ஏன் கஷ்டப்படுற? ஆபரேஷனை ஃபிக்ஸ் பண்ணு, ரெடி பண்ணிடலாம்’ என்று சொன்னார். என் நேரம், அவர் போய் சேர்ந்துட்டார். வடிவேலு கூட நடிச்சு பேர் வந்தது உண்மை, ஆனால் ஊதியம் பெருசா வரல. ஆனால், அவர் கூட நடிச்சதால தான், பெரிய நடிகர்களின் அறிமுகம் கிடச்சது. பணம் கொடுத்து உதவல, போன் பண்ணியாவது விசாரிச்சிருக்கலாம். அவரை விடுங்க, சூரி என் வீட்டுல சாப்பிட்டு, தங்குன ஆளு தான். ஒரு போன் பண்ணி கேட்கல. என் கூட நடிக்காத விஜய்சேதுபதி சார் உதவி பண்ணி பேசுறாரு, சூரிக்கு பேசுறதுக்கு என்ன? என்று பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

வாழ்ந்தவர் கோடி!… மறைந்தவர் கோடி!… மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் இன்று!

Sun Dec 24 , 2023
தமிழ் திரை உலகை பல வருடங்களும், தமிழ்நாட்டை 10 வருடங்களும் ஆட்சி செய்த பெருமை கொண்டவர்தான் எம்.ஜி.ஆர். முதல்வராக 10 ஆண்டுகள் பதவி வகித்து மக்களின் மனதில் என்றைக்கும் நீங்காத தனிப்பெரும் தலைவராக உயர்ந்து நிற்கும் அதிமுக என்னும் கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் இன்று. சினிமாவில் தனிப்பெரும் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்த எம்ஜிஆர் உழைக்கும் மக்கள், பழங்குடி மக்கள், விவசாயிகள், மீனவர்கள், காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் […]

You May Like