fbpx

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்..? நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்…

சிலர் காலையில் அலுவலகம் கிளம்பும் வேகத்தில் காலை உணவை தவிர்த்துவிடுகின்றனர், சிலரோ வேறு சில காரணங்களால் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால், நம் உடலுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக, நாமே தீங்கு விளைவிப்பதோடு, இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இப்படி காலை உணவை தவிர்த்து வருபவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

காலையில் அவசர அசரமாக சாப்பிடாமல் வேலைக்கு செல்பவர்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படும். நீண்டகாலமாக காலை உணவை தவிர்த்து வருபவர்களுக்கு, அஜீரணம், இரைப்பை அழற்சி(gastric inflammation), நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் எடையைக் குறைக்க சிலர் காலை உணவை தவிர்த்திவிடுவர், இது பலனையும் தரும். ஆனால் நீங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்யும். இதன் மூலம், பெரும்பாலும் குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு மயக்கம் ஏற்படலாம்.

Kathir

Next Post

BA.2.86 என்னும் புதிய வகை வைரஸ்....! 3 முறை தடுப்பூசி போட்டாலும் பாதிப்பு...! ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!

Sat Aug 19 , 2023
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது. இதனால் கொரோனா தொற்று மீண்டும் உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்கள் ஆகியோருக்கு எளிதில் கொரோனா தொற்று ஏற்படும். ஆனால் அது போன்ற நபர்களுக்கும் தடுப்பூசி பாதுகாப்பு தரும். தற்பொழுது 3 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா […]

You May Like