fbpx

ரூ.22கோடிக்கு விற்கப்பட்ட, 60 வருடம் பதப்படுத்தப்பட்ட விஸ்கி..! ஒரே ஒரு சொட்டு போதும்…

ஸ்காட்ச் விஸ்கி என பிரபலமடைந்துள்ள ஸ்காட்லேண்டு நாட்டின் விஸ்கி மதுபானம் உலகெங்கும் பலரால் விரும்பப்படுபவை. இவற்றின் தரத்திற்காகவும் சிறப்பான சுவைக்காகவும், மதுபான பிரியர்கள் ஸ்காட்ச் விஸ்கிக்களை என்ன விலை கொடுத்தாவது வாங்குவது வழக்கம். மிக அரிதான பொருட்களை விற்க விரும்புபவர்களுக்கும் அவற்றை வாங்க விரும்புபவர்களுக்கும் இடையே ஏல முறையில் வர்த்தகம் நடத்தும் உலக புகழ் பெற்ற நிறுவனம், சாத்பீ’ஸ் (Sotheby’s). பன்னாட்டு நிறுவனமான சாத்பீ’ஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு உலகின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் லண்டன் கிளையில், இரு தினங்களுக்கு முன், 1926 வருட மெக்ஆலன் ஆடமி சிங்கிள் மால்ட் விஸ்கி (Macallan Adami Single Malt Whiskey) மதுபானம் சுமார் ரூ.22,48,89,885.00 கோடி ($2.7 மில்லியன்) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த விஸ்கி, இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மதுபான வகைகளில் முன்னர் கிடைத்த தொகையை விட அதிகமாக ஏலம் விடப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

“இந்த ஒரு விஸ்கியைத்தான் உலகின் மது பிரியர்கள் ஏலத்தில் விற்கவும் விரும்புகின்றனர்; வாங்கவும் போட்டி போடுகின்றனர். இந்த மதுபானத்தின் சிறு துளியை நான் ருசி பார்க்க அனுமதிக்கப்பட்டேன். இது மிகவும் வளமையான விஸ்கி. எதிர்பார்த்ததை போலவே இதில் ஏராளமான உலர் பழங்கள் பயன்படுத்தப்பட்டு அவற்றின் திடம் சிறப்பாக உள்ளது” என இந்த ஏல நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜானி ஃபவுல் (Jonny Fowle) இதன் தரம் குறித்து கூறினார்.

இந்த விஸ்கி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து சுமார் 60 வருட காலம் கருமையான ஓக் ஷெர்ரி (black oak sherry) பீப்பாய்களில் ஊற வைக்கப்பட்டது. அதன் பிறகு 1986ல் இது பாட்டிலில் அடைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் இது போன்ற விஸ்கி, மொத்தம் 40 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது; ஆனால், இவை வெளிச்சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. இவற்றை தயாரித்த மெக்ஆலன் நிறுவனம் தங்களின் மிக முக்கிய வாடிக்கையாளர்களுக்கே இவற்றை அளித்துள்ளது. 40 பாட்டில்களையும் வெவ்வேறு வகையில் மெக்ஆலன் நிறுவனம் லேபிள் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், வெவ்வேறு காலகட்டங்களில் இவை ஏலத்திற்கு வரும் போது, மிக அதிக தொகையை பெற்று தருகின்றன.

Kokila

Next Post

விஜயகாந்தின் உடல்நிலை..!! தேமுதிகவில் அதிரடியாக மாறும் பொறுப்புகள்..!! நடப்பது என்ன..?

Tue Nov 21 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேசமயம், தேமுதிகவுக்குள் விரைவில் ஒருசில மாற்றங்கள் ஏற்படலாம் என்கிறார்கள். இதுகுறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம். தேமுதிக தலைவராக பிரேமலதா பொறுப்பேற்பார் அல்லது செயல் தலைவராக பொறுப்பேற்பார் அல்லது பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என்று பல்வேறு செய்திகள் அடிக்கடி மீடியாக்களில் வலம் வந்தபடியே உள்ளன. குறிப்பாக, திமுக பாணியிலேயே “செயல் தலைவர்” பதவி தேமுதிகவிலும் […]

You May Like