fbpx

வெள்ள நிவாரண நிதி வழங்க விருப்பமா..? வங்கி விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்களை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும், திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடவுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும் பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக மிக்ஜாம் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ன்கீழ் 100% வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIS) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன்கீழ் விலக்களிக்கப்படும்.

(1) வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி பற்றுச் சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

(2) Electronic Clearing System (ECS) / RTGS / NEFT

கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

வங்கி பெயர் : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

கிளை : தலைமைச் செயலகம், சென்னை 600 009

சேமிப்புக் கணக்கு எண் : 117201000000070

IFS Code : IOBA0001172

For International Payment

A/c Number : 11720 10000 00070
Bank : Indian Overseas Bank
Branch : Secretariat Branch, Chennai 600 009
SWIFT CODE : IOBAINBB001

Chella

Next Post

இனி Gpay, PhonePe-இல் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

Fri Dec 8 , 2023
இந்தியாவில் மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களில் ஜி.பே., போன் பே உள்ளிட்ட யுபிஐ மூலம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மும்பையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5 ஆவது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக […]

You May Like