+2 Result: தமிழகத்தில் +2 ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில் வழக்கம்போல் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கடந்த ஆண்டை போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,52,165 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,25, 305 பேர் (92.37 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். 4, 08, 440 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 3, 93,890 பேர் (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 94.03 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 2022ல் 93.80 சதவீதமாக இருந்தது. இதற்கிடையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடத்தப்பட்டது மற்றும் செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெற்றது.