fbpx

நாளை பூமிக்கு மிக நெருக்கமாக வரும் விண்கல்!… பேரழிவை ஏற்படுத்தக்கூடும்?… நாசா கூறுவது என்ன?

2023 FZ3 என்ற மிகப்பெரிய விண்கல் நாளை (ஏப்ரல் 6)ம் தேதியன்று பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா கூறியுள்ளது.

பூமியை நெருங்கும் விண்கற்கள் பற்றிய எச்சரிக்கை அவ்வப்போது வெளியாகிவருகின்றன. அவை பூமி மீது மோதுவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. சமீபத்தில், நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், வருங்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் பற்றித் தெரிவித்துள்ளது. ஐந்து விண்கற்கள் பூமியை நெருங்கும் என்றும் அவற்றில் இரண்டு பூமிக்கு மிக நெருக்கமான வரக்கூடியவை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது. நாசாவின் ஆஸ்டெராய்டு வாட்ச் டாஷ்போர்டு விண்கற்கள் மற்றும் வால்மீன்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு விண்கல்லும் பூமியை நெருங்கும் உத்தேச தேதி, விண்கல்லின் தோராயமான விட்டம், பூமியிலிருந்து அதன் தூரம் ஆகிய விவரங்களை வெளியிடுகிறது.

2023 FZ3 என்ற அடுத்து வரவிருக்கும் மிகப்பெரிய விண்கல் ஒரு விமானத்தின் அளவு பெரியது. இது ஏப்ரல் 6 அன்று பூமியைக் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 150 அடி அகலமுள்ள இந்த விண்கல் பூமியை நோக்கி 67656 கிமீ வேகத்தில் நகர்கிறது. பூமிக்கு மிக அருகில் வரும் இது 4,190,000 கிமீ தொலைவில் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது பூமிக்கு அபாயகரமானதாகக் கருதப்படவில்லை. வெவ்வேறு அளவுகளில் சுமார் 30,000 விண்கற்கள் பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளன. அவை எதுவும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை அச்சுறுத்தாது என்று கூறப்படுகிறது.

நமது சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அப்போதில் இருந்து விண்கற்கள் விண்வெளியில் எஞ்சியிருக்கின்றன என நாசா சொல்கிறது. சமீபத்தில், ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவுள்ள விண்கல் ஒன்றை நாசா கண்டுபிடித்தது. அது இன்னும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு காதலர் தினத்தன்று பூமியுடன் மோதுவதற்கான சிறிய வாய்ப்பு இருப்பதாகக் நாசா கணித்துள்ளது.

Kokila

Next Post

வாட்டும் வெயில்!... இனி ஏசி தேவையில்லை!... ஃபேன் காற்றின் மூலம் வீட்டை குளுகுளுன்னு வைக்க சில டிப்ஸ்!

Wed Apr 5 , 2023
கோடைக்காலத்தில் அனலை சமாளிக்க ஏசி இல்லாமல் ஃபேன் காற்றின் மூலம் வீட்டை குளுகுளுன்னு வைத்துக்கொள்ள சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெயில் கடுமையாக வாட்டிவதைத்து வருகிறது. வெயிலின் அனலால், வீட்டிற்கு இருந்தாலும் சாலைகளில் இருப்பது போன்றே உடல் சூடு இருக்கிறது. இதனை சமாளிக்க நீரும் மட்டுமே நமக்குச் சற்று ஆறுதலாக இருக்கும் நிலையில், சிலர் ஏசி மூலம் வீட்டை குளுமையாக வைத்துக்கொள்கின்றனர். இதன்மூலம் அனல் குறைந்தாலும், […]

You May Like