சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள பெயிண்டர் தேவாஸ்(40) நெத்திமேடில் இருக்கும் ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த கல்லூரி மாணவி குளிப்பதை பார்த்த தேவாஸ் அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதை பார்த்த அந்த பெண் கூச்சலிட்டார். உடனே மாணவியின் தந்தை பெயிண்டரை பிடித்து வைத்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த பெயிண்டர் தேவாஸை கைது செய்தனர். அதன் பின்னர் அந்த பெயிண்டர் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.