தீவுநாடான ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 3 மணி நேரத்தில் சுமார் 30 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 161 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் வலுவான பல நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 1,214 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. இதனால் மேலும் பல நிலநடுக்கம் ஏற்படலாம் என்று மக்கள் பீதியில் உள்ளனர்.