fbpx

அடேங்கப்பா..!! ஒரே கட்டிடத்தில் வாழும் 30,000 பேர்..!! இந்த பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு இருக்கு தெரியுமா..?

சீனாவில் உள்ள ஒரு கட்டிடம் தொடர்பான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 36 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கட்டிடம் ஒரு நகரத்தை போல் உள்ளது. உலகில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாக வியக்கவைக்கும் அளவிற்கு பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கவர்ச்சிகரமான வடிவமைப்பு காரணமாக அவை அனைவராலும் வியந்து பார்க்கப்படுகிறது.

சீனாவில் இதுபோன்ற ஆச்சரியமூட்டும் பல கட்டிடங்கள் இருக்கின்றன. அந்த வகையில், பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் இப்போது 30,000 பேர் வசிக்கின்றனர். இத்தனை பேர் இந்த கட்டிடத்தில் வசிக்கும் நிலையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அந்த கட்டித்திற்குள்ளேயே இருக்கிறது.

சீனாவின் ஹாங்சோவில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் கட்டப்பட்ட ரீஜண்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்ட் தான் அந்தக் குடியிருப்பு. S வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 30,000 பேர் வாழ்கின்றனர். இந்த 36 மாடி கட்டிடம் 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது இருபதாயிரம் பேர் வாழ்ந்தனர். இப்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை எட்டியுள்ளது. இந்த அபார்ட்மெண்ட் ஒரு காலத்தில் ஹோட்டலாக இருந்தது.

இந்த கட்டிடம் 206 மீட்டர் உயரம் கொண்டது. இதில் பல வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தில் ஒரு பெரிய உணவு விடுதி உள்ளது. நீச்சல் குளம், சலூன், பல்பொருள் அங்காடி மற்றும் இணைய தள மையம் ஆகியவையும் உள்ளன. இந்த கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் எதற்கும் வெளியே செல்ல தேவையில்லை. இந்த கட்டிடத்திலேயே அவர்களுக்கான அனைத்தும் கிடைக்கிறது. இந்தக் கட்டிடத்தில் பெரும்பான்மையாக இளைஞர்கள் இருக்கிறார்கள். அதே போல கனிசமான அளவில் சிறு வணிகர்களும் இருக்கிறார்கள்.

Chella

Next Post

வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கிறதா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Fri Oct 6 , 2023
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இன்று நடப்பு நிதியாண்டின் 4-வது நிதிக் கொள்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், ”ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், ரெப்போ விகிதத்தை அதிகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். அதனடிப்படையில், நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ரெப்போ விகிதம் ஏற்கனவே இருந்ததை போன்று 6.50% ஆக தொடரும். […]

You May Like