நவம்பர் 19ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளன.
நாட்டில் தற்போது உள்ள பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் கொள்கை, ஓய்வூதியம் மற்றும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் பணி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 19ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், நாடு முழுவதும் நவம்பர் 19ஆம் தேதி வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், “சமீப காலமாக வங்கி ஊழியர்கள் பணி நீக்கம் அதிகரித்து வருவது மட்டுமின்றி இது அனைத்திலும் பொதுவான கருத்து உள்ளது என்றார். இந்த வேலை நிறுத்த போராட்டம் வங்கி ஊழியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், சோனாலி வங்கி, MUFG வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவற்றால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா போன்ற அரசு வங்கிகள் தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள் பல வங்கி நடவடிக்கைகளை அவுட்சோர்சிங் செய்வதாகவும்” கூறினார்.