ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிமுறையை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது..
போக்குவரத்து ஆணையர் இதுகுறித்து அனைத்து சரக அலுவலர்கள், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.. அதில் “ போக்குவரத்து ஆணையர் தலைமையில் கடந்த மாதம் 18-ம் தேதி காணொலி வாயிலாக நடந்த ஆய்வு கூட்டத்தி வழங்கிய அறிவுரையின் படி அனைத்து ஓட்டுநர் உரிம தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்தப்பட வேண்டும்..
வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.. இந்த தேர்வுகளுக்கு கணினி மூலம் முன்பதிவு செய்திட ஏதுவாக, பொதுமக்களின் வசதிக்கேற்ப நாள் மற்றும் நேரத்தினை தேர்ந்தெடுத்து வழிவகை செய்யப்பட வேண்டும்..
மேலும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாட்களில், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் விண்ணப்பங்களுக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும்.. இந்த உத்தரவுப்படி அனைத்து சரக அலுவலர்கள், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்களும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..