ஆக்சிஸ் வங்கி நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
HDFC வங்கி உள்ளிட்ட 3 முக்கிய வங்கிகள், தங்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகளில் ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடங்கும். 7 நாட்கள் முதல் 29 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 2.50% வட்டி விகிதத்தை வழங்குவதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பல்வேறு தவணைக்காலங்களில் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன, அதன் படி, தற்போது பொது மக்களுக்கு 2.90% முதல் 5.65% வரையிலான வட்டி விகிதங்களுடன் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வுகளுடன் நிலையான வைப்புகளை வழங்குகிறது. இதேபோல், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 555 நாட்கள் வரையிலான முதிர்வு கால அளவுள்ள நிலையான வைப்புகளுக்கு 2.75% முதல் 5.55% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதை தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி ரூ. 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. புதிய வட்டி விகிதங்கள் 11-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகக் கூறியது. 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 2.50% வட்டி விகிதத்தை தொடர்ந்து வழங்குவதாகவும், 30 நாட்கள் முதல் 3 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3.00% வட்டி விகிதத்தை வங்கி வழங்கும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.