fbpx

பூட்டிய வீட்டுக்குள் துர்நாற்றம்..!! உடனே விரைந்த போலீஸ்..!! கதவை திறந்து பார்த்தால் ஷாக்..!! கணவர் எங்கே..?

தென்காசி நடுமாதாங்கோயில் தெருவில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் சந்திரன்-சித்ரா தம்பதி கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில், வீட்டில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தில் வசித்து வருபவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி போலீசார், துர்நாற்றம் வீசிய
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, கட்டிலில் சித்ரா கட்டிவைக்கப்பட்ட நிலையில் முகம் சிதைவடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அதனைதொடர்ந்து, அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன்-மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்த வீட்டில் மனைவி மட்டும் கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதைவடைந்த நிலையில் இறந்து கிடப்பதால், சித்ராவை அவரது கணவன் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கணவரான சந்திரனை தற்போது போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..? பள்ளிக்கல்வித்துறை எடுக்கப் போகும் முக்கிய முடிவு..!! மாலை அறிவிப்பு..?

Fri Jun 23 , 2023
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில், தற்போது மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தவகையில், கடந்த 19ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கும், 20ஆம் தேதி 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் பள்ளி கல்வித்துறை முக்கியமான ஒரு முடிவை விரைவில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பள்ளிகள் மீண்டும் திறந்த பின் காலாண்டு தேர்வு வரை தொடர்ந்து சனிக்கிழமை பள்ளிகளை நடத்த […]

You May Like