fbpx

கர்நாடகாவில் பரபரப்பு…! காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியை எரித்து பஜ்ரங் தள் போராட்டம்..!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை பஜ்ரங் தள் அமைப்பு எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வதாக உறுதியளித்த காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் தொண்டர்கள், அக்கட்சி அளித்த வாக்குறுதியை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மே 10-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் அறிக்கையை எரித்தும், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். செவ்வாயன்று வெளியிடப்பட்ட கர்நாடக தேர்தல் அறிக்கை, சாதியின் அடிப்படையில் சமூகங்களிடையே வெறுப்பை பரப்பும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையில் இதுபோன்ற அமைப்புகளுக்கு எதிராக தடை விதிக்கப்படும் என்று எதிர்க்கட்சி உறுதியளித்தது.

Vignesh

Next Post

ஆந்திராவில் செம்மரம் கடத்தல்……! 13 தமிழர்கள் உட்பட 16 பேர் அதிரடி கைது….!

Wed May 3 , 2023
ஆந்திர மாநிலத்தில் அடிக்கடி செம்மரங்கள் கடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். இது தொடர்பாக அந்த மாநில காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக ஆந்திர மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி கடத்தப்படும் செம்மரக்கட்டைகள் மருந்துகள், இசை கருவிகள், மரத்தாலான பொருட்கள் உள்ளிட்டவை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது. அதோடு ரேடியம், யுரேனியம் […]

You May Like