fbpx

இனி 1 கோடி ரூபாய் வரை எடுக்கலாம்…! வங்கி வாடிக்கையாளர்களுக்கு RBI வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி…!

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்போது வங்கிகளில் ரூ.1 கோடி வரை நிரந்தர வைப்புத்தொகை செலுத்தும் டெபாசிட் செய்பவர்கள், முதிர்வுக்கு முன்பே பணத்தை எடுக்க முடியும், முன்பு இந்த வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. தனிநபர்களிடமிருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கு குறைவான தொகைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் அனைத்து உள்நாட்டு குறித்த கால வைப்புகளுக்கும் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி இருக்கும். ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு என்ஆர்இ டெபாசிட் மற்றும் என்ஆர்ஓ டெபாசிட்டுக்கும் பொருந்தும். ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

ரிசர்வ் வங்கி 26 அக்டோபர் 2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில், முதிர்வுக்கு முன்பே திரும்பப் பெறும் விருப்பத்துடன் 15 லட்சம் அல்லது அதற்கும் குறைவான கால டெபாசிட்களை எடுக்க வங்கிகளுக்கு விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதிர்ச்சிக்கு முந்தைய விருப்பம் இல்லாமல், அழைக்க முடியாத வைப்புகளில் வெவ்வேறு வட்டி விகிதங்களில் வைப்புகளை வங்கிகள் ஏற்றுக் கொள்ளலாம். அதை பரிசீலனை செய்த பிறகு, முதிர்ச்சிக்கு முன் பணம் எடுக்கும் வசதி கிடைக்கும், வைப்பு நிதி தற்போது வங்கிகள் ரூ.15 லட்சம் வரையிலான வைப்பு நிதிக்கு முதிர்வு காலத்துக்கு முன்பே திரும்ப பெறும் வசதியை வழங்குகின்றன.

இனி இது ரூ.1 கோடியாக உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த முடிவு NRE மற்றும் NRO வைப்புகளுக்கும் பொருந்தும். முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே திரும்ப பெறும் வசதி டெபாசிட்தாரர்களுக்கு கிடைக்கும். வங்கிகள் தற்போது வைப்பு நிதிக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பேங்க் ஆஃப் பரோடா ரூ.2 கோடிக்கும் குறைவான FD- களுக்கு 0.25 சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கிறது. எஸ்.பி.ஐ. 7.50 சதவீதம் வரையிலும், எச்.டி.எஃப்.சி. வங்கி 7.75 சதவீதம் வரையிலும் வட்டி வழங்குகின்றன.

Vignesh

Next Post

சூப்பர்...! 10 ஆண்டு பணி முடித்துள்ள பணியாளர்களுக்கு தேர்வுநிலை வழங்கலாம்...! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு...!

Sat Oct 28 , 2023
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவாளர், இரவுக் காவலர் பதவி இரண்டையும் சேர்த்து 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள பணியாளர்களுக்கு தேர்வுநிலை வழங்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது ; அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அடிப்படைப் பணியாளர்களான […]

You May Like