fbpx

திருப்பூர்| அரசு பேருந்தில் பயணம் செய்த பனியன் கம்பெனி தொழிலாளி…..! மாரடைப்பால் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்த சோகம்….!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் புதூர் பாரதி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை இவர் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் நாள்தோறும் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் இருக்கின்ற முதலியார் பாளையம் சிட்கோ பகுதியில் இருக்கின்ற பனியன் நிறுவனம் ஒன்றுக்கு பேருந்தில் வேலைக்காக சென்று வருவது இவருடைய வழக்கம் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், இன்று காலை வழக்கம் போல அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து அரசு பேருந்து ஏறி பயணம் செய்தார். பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே மாரடைப்பு உண்டாகி அமர்ந்த நிலையிலேயே அவரது உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவே, அந்த பேருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது அசோக்குமார் உயிரிழந்துவிட்டார் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சக பயணிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த அசோக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

இதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு…..! மாணவர்கள் இடையே நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு…..!

Sat Jun 17 , 2023
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கின்றன இந்த தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் உடன் ஊக்கத் தொகையையும் வழங்கும் கல்வி விருது விழா சென்னை நீலாங்கரையில் ஆர்கே கன்வென்ஷன் மையத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய் தமிழகத்தில் முதல் மற்றும் 600 க்கு 600 என முழுமையான மதிப்பெண் பெற்ற […]

You May Like