திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் புதூர் பாரதி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை இவர் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் நாள்தோறும் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் இருக்கின்ற முதலியார் பாளையம் சிட்கோ பகுதியில் இருக்கின்ற பனியன் நிறுவனம் ஒன்றுக்கு பேருந்தில் வேலைக்காக சென்று வருவது இவருடைய வழக்கம் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், இன்று காலை வழக்கம் போல அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து அரசு பேருந்து ஏறி பயணம் செய்தார். பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே மாரடைப்பு உண்டாகி அமர்ந்த நிலையிலேயே அவரது உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு நடுவே, அந்த பேருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது அசோக்குமார் உயிரிழந்துவிட்டார் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சக பயணிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த அசோக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.