fbpx

விதிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி … பி.சி.சி.ஐ.க்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம் …

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியகிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி , செயலாளர் ஜெய்ஷா ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு பி.சி.சி.ஐ.-ல் இதுவரை விதிமுறைகள் இல்லை. எனவே இவர்களின் பதவிக்காலம் நீட்டிப்புக்கு பி.சி.சி.ஐக்கு அனுமதி தேவை எனவே இது தொடர்பாக இந்த  விவகாரத்தில்  விதிகளை திருத்த பி.சி.சி.ஐக்கு அதிகாரம் வேண்டும் எனவே  அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  

உச்சநீதிமன்றம்

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திர சுக்லா அமர்வு விசாரித்தது. பதவிக்காலங்களுக்கு இடையே இது தொடர்பான விதியை பி.சி.சி.ஐ. திருத்திக் கொள்ளலாம். மேலும் இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லை எனவே விதிகளில் திருத்தம் செய்துகொள்ள அனுமதி அளித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆணை பிறப்பித்தது.

புதிய விதியால் மாநில கிரிக்கெட் , இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடைவிடாமல் ஒருவர் தலைவர் பதவியில் தொடர முடியும் கங்குலி , ஜெய்ஷா ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Post

’சசிகலா எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்’..! ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி

Wed Sep 14 , 2022
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சசிகலா எங்களுடன் இணைவார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் […]

You May Like