fbpx

’பருவமழை காலத்தில் கவனமுடன் இருங்கள்’..! டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்..! – சுகாதாரத்துறை

டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும், வரக்கூடிய பருவமழை காலக்கட்டத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கொசுவினால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு 23,294 பேருக்கு டெங்கு பாதிப்பும், 65 பேர் உயிரிழந்தாகவும் கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு 4,486 பேருக்கு பாதிப்பும், 13 பேர் உயிரிழந்தும் உள்ளதாகவும், 2019ஆம் ஆண்டு 8,527 பேருக்கு பாதிப்பும், 5 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’பருவமழை காலத்தில் கவனமுடன் இருங்கள்’..! டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்..! - சுகாதாரத்துறை

கடந்த 2020ஆம் ஆண்டில் இரண்டாயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 39 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் உயிரிழந்தாகவும், இந்தாண்டு இதுவரை 3,205 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய பருவமழை காலத்தில் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள், கொசு ஒழிப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பாகிஸ்தானில் பேருந்து மீது டேங்கர் லாரி மோதி; தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி சாவு.. கோர விபத்து..!

Tue Aug 16 , 2022
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இன்று பேருந்தின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிருடன் எரிந்தனர். லாகூரில் இருந்து சுமார் 350 கிமீ தொலைவில் இருக்கும் முல்தான் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாகூரில் இருந்து கராச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து மீது அதிவேகமாக […]

You May Like