fbpx

உஷார்..!! இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே எப்போது மழை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதே சென்னை வாசிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வரும் 2ஆம் தேதி புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 3ஆம் தேதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி உருவாகும் புயல், வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் டிச.4ஆம் தேதி அதிகாலை வங்கக்கடலில் உருவாகும் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

'இனி அதிமுகவின் பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன்'..!! ஓ.பன்னீர்செல்வம் உத்தரவாதம்..!!

Thu Nov 30 , 2023
மறு உத்தரவு வரும் வரை அதிமுக பெயர், கொடியை பயன்படுத்த மாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் உத்தரவாதம் அளித்துள்ளார். அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என ஓ.பன்னீர்செல்வத்திற்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உத்தரவை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் […]

You May Like