மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், 3,042 சவரன் தங்க நகையை நூதன முறையில் மோசடி செய்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்தவர் பாத்திமா நாச்சியா. இவர், கடந்த 2011ஆம் வருடம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடம் நூதன முறையில் நகைகளை வாங்கி ஏமாற்றியுள்ளார். ஒரு சவரனுக்கு ரூ.1,500 ரூபாய் தருவதாகவும், 15 நாள் முடிந்த பிறகு நகைகளை மீண்டும் திருப்பித் தருவதாகவும் கூறி பலரிடமும் தங்க நகைகளை பெற்றுள்ளார். 3 மாதங்களுக்கும் மேலாக சொன்னபடி, நகையை கொடுத்தவர்களுக்கு பணம் கொடுத்து வந்ததால், இதனை நம்பி, பலரும் நகையை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
![’நம்பி வாங்க.. ஒரு சவரன் கொடுத்துட்டு போங்க’..!! மொத்தம் 3,042 சவரன் அபேஸ்..!! கில்லாடி பெண்ணின் பலே பிளான்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-31-at-10.06.44-AM.jpeg)
இந்நிலையில், 2012ஆம் ஆண்டில் கிடைத்த வரைக்கும் லாபம் என்று நினைத்துக் கொண்டு மொத்தம் 3,042 சவரன் தங்க நகைகளுடன் தலைமறைவானார். இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்த நிலையில், விசாரணைக்காக சீர்காழி காவல் நிலையத்துக்கு பாத்திமா நாச்சியா வந்தார். இதையறிந்து, நகையை கொடுத்து ஏமாந்த ஏராளமான பெண்கள் அங்கு திரண்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நகை மோசடி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.