fbpx

அதிரடி அறிவிப்பு..!! 2025 ஐபிஎல் தொடரின் RCB அணியின் கேப்டனாக ரஜத் படிதர் நியமனம்..!! ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதர் (வயது 31) நியமிக்கப்பட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, 2021ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போதில் இருந்தே ஆர்சிபி, படுமோசமாக சொதப்பி வருகிறது. கோலிக்கு பிறகு, கேப்டனாக பொறுப்பேற்ற டூ பிளஸி, அணிக்கு 21 வெற்றிகளையும், 42 தோல்விகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால்தான், 18-வது சீசனுக்கான மெகா ஏலத்திற்குமுன், டூ பிளஸியை ஆர்சிபி வெளியேற்றியது.

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது. மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை. எனவே, விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More : ’ரேகிங்கிற்கு அளவே இல்லையா’..? ஆணுறுப்பில் டம்பிள்ஸ்..!! காயத்திற்கு பாத்ரூம் கழுவும் மருந்து..!! பெற்றோரிடம் கதறி அழுத மாணவன்..!!

English Summary

Rajat Patidar (age 31) has been appointed as the new captain of the Royal Challengers Bangalore team.

Chella

Next Post

குழந்தைகள் அதிக நேரம் ஃபோன் பாக்குறாங்களா..? இந்த பாதிப்பு ஏற்படும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

Thu Feb 13 , 2025
Excessive time spent looking at screens such as television and smartphones can lead to reduced language development skills in children.

You May Like