fbpx

’நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய மாற்றம்’..!! ’இனி ஜெட் வேகத்தில் அதிமுக’..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!

சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக செயற்குழு, பொதுக்குழுவால் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது. மதுரை மாநாடு பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. அதிமுக மதுரை மாநாடு போல் இனி யாராலும் நடத்த முடியாது. மதுரை மாநாட்டை விமர்சித்த உதயநிதி ஸ்டாலினால் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்த முடியவில்லை.

இதனால் இந்த மாநாட்டை பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி, எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. பல சோதனைகளை சந்தித்ததும் அதிமுக தான். அதனை வெற்றியாக்கியதும் அதிமுக தான். தமிழ்நாட்டிலே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக தான். கொரோனா போன்ற காலக்கட்டத்திலும் அதிமுக அரசு மக்களை காத்தது.

ஆனால் செயலற்ற ஆட்சியாக திமுக அரசு உள்ளது. ஊழல் செய்வதில் தான் திமுக சாதனை செய்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் எத்தனை பேர் எங்கு இருப்பார்களோ அங்கு இருப்பார்கள். திமுகவுக்கு இறங்குமுகம் ஏற்பட்டு விட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்றம் வரும்” என்று பேசினார்.

Chella

Next Post

அடுத்தடுத்து பெண்கள் கொலை.! அதிர்ச்சியில் கிராம மக்கள்.! சிக்கிய கொலையாளியின் திக் திக் வாக்குமூலம்.!

Tue Dec 26 , 2023
கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது பெண் தனது மகன் வீட்டிற்கு சென்று வருவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் […]

You May Like