fbpx

தமிழ்நாட்டை காப்பியடித்த பீகார்!… பிசி,எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 65% ஆக உயர்வு!… முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி!

பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

1931ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில்தான் பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அண்மையில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநில அரசு அண்மையில் நடத்தியது. இந்தநிலையில், நேற்று பீகார் சட்டசபையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பேசிய முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகாரில் 60%க்கும் அதிகமாக பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஆகையால் அவர்களுக்கான இடஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்தார். அந்தவகையில், மொத்தமாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு அளவு 65% ஆக உயருகிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டையும் சேர்த்தால் பீகாரில் இடஒதுக்கீடு அளவு 75%ஆகும் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு 69% ஆக உள்ளது. இந்த 69% இடஒதுக்கீடு சட்டத்துக்கு அரசியல் சாசன பாதுகாப்பு வழங்கும் வகையில் ஏற்கனவே ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தில் முட்டி மோதியும் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதர மாநிலங்களின் இடஒதுக்கீடு வழக்குகளில் உச்சநீதிமன்றமானது இடஒதுக்கீடு அளவு 50%க்குள் இருக்க வேண்டும் என தீர்ப்புகள் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

மின்சார நிலுவை கட்டணத்தை செலுத்த சூப்பர் சலுகை!… இன்று முதல் அமல்!… முதல்வரின் ஒருமுறை தீர்வு திட்டம்!

Wed Nov 8 , 2023
நீண்ட நாட்களாக செலுத்தாமல் உள்ள மின்சார நிலுவை கட்டணத்தை வசூல் செய்ய ஒருமுறை தீர்வு என்ற புதிய திட்டத்தை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் […]

You May Like